காட்சி பொருளாக இருக்கும் வாகன ஆய்வாளர் கட்டிடம்

Update: 2023-09-10 12:28 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் போக்குவரத்து துறையின் சார்பில் வாகன ஆய்வாளர் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் காட்சி பொருளாக கட்டிடம் இருந்து வருகிறது. மேலும், கட்டிட வளாகத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஆய்வாளர் கட்டிடம் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்