ஊராட்சி அலுவலக கட்டிடம் வேண்டும்

Update: 2023-09-06 12:27 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள் உள்ளன. இதில் பல்லபுரம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்ற நிலையில், இந்த ஊராட்சிக்கு அலுவலகம் இல்லாத நிலையில் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த ஊராட்சியில் அலுவலகம் இல்லாத ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மேல் நீர்த்தேக்க தொட்டியின் கீழ் ஊராட்சி அலுவலகமாக செயல்படுகிறது. இதனால் ஊராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மரத்தடியில் நின்று அலுவலக வேலையை செய்து விட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊராட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்