பறவைகளுக்கு தனி சந்தை அமைக்கலாமே

Update: 2023-09-03 18:12 GMT
வடலூர் நகராட்சி அய்யன்ரோடு பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இனங்களும் விற்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே ஆடு, மாடுகளுக்கு தனி சந்தை ஒதுக்கப்பட்ட நிலையில், பறவை இனங்களுக்கும் தனி இடம் ஒதுக்கினால் நெரிசல் குறையும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்