நாய்கள் தொல்லை

Update: 2023-09-03 10:52 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி கிராமத்தில் உள்ள சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி்க்கொள்கின்றனர். இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்