மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2023-09-03 10:51 GMT

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்து பூக்கொல்லை பகுதியில் சேதுபாவாசத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் 3-தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரத்தில் இருந்து தென்னை மட்டைகள், தேங்காய்கள் வாகன ஓட்டிகள் மீது விழுந்துவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி காயம் அடைந்து வருகின்றனர். மேலும்,தென்னை மரம் சாய்ந்த நிலையில் இருப்பதால் பலத்த காற்று வீசும் போது முறிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்