தூர்ந்து போன ஏரி

Update: 2023-08-30 09:27 GMT
மரக்காணம் அருகே முறுக்கேரியில் உள்ள ஏரியை பயன்படுத்தி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது ஏரி தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே ஏரியை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்