அஞ்சல் நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2022-07-25 12:47 GMT

அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கருவூலம், தீயணைப்புத்துறை மற்றும் மாவட்ட நூலகம் என பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேற்படி அலுவலகங்களின் தபால்கள் அனுப்ப வேண்டும் என்றால் சத்திரம் எம்.டி. ஜி. நிலையத்திற்கு சென்று தான் அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேற்படி அஞ்சல் நிலையத்தில் ஒரே கவுண்டரில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதோட அல்லாமல் அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு துறைகளின் கடிதங்களும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அரியலூர் எம்.டி.ஜி. அஞ்சல் நிலையத்திற்கு வந்து அனுப்ப வேண்டிய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூர் நகரின் மத்திய பகுதியான வட்டாட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அருகில் புதிய கிளை அஞ்சலகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்