விருதுநகர் மாவட்டம் பி.குமாரலிங்கபுரம் என்ற வள்ளியூரில் உள்ள பயணிகள் நிழற்குடையின் தரைத்தளம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தரைத்தளத்தில் பெயர்ந்து உள்ள கற்கள் கால்களை பதம்பார்கின்றன. இதனால் முதியோர்கள், குழந்தைகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பயணிகள் பலர் நிழற்குடையின் வெளிப்புறத்தையே நிழற்குடையாக பயன்படுத்துகின்றனர். எனவே தரைத்தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.