நாய்கள் தொல்லை

Update: 2023-08-27 11:23 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி செல்கின்றன. வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்த பகுதியில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்