கிடப்பில் அங்கன்வாடி மைய கட்டிட பணி

Update: 2023-08-23 18:09 GMT
குறிஞ்சிப்பாடி அருகே த.பாளையம் ஊராட்சி அலுவலக கட்டிடம் அருகே அங்கன் வாடி மையம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் தொடங்கிய பணிகள் நாட்கள் செல்ல, செல்ல நத்தை வேகத்திற்கு மாறியது. பின்னர், மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அங்கன் மையம் கட்டிட பணியை மீண்டும் தொடங்கி், விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்