இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

Update: 2023-08-23 18:09 GMT
குறிஞ்சிப்பாடி அருகே மதனகோபாலபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் பாழடைந்த நிலையில் துணை சுகாதார நிலைய கட்டிடம் அமைந்துள்ளது. மேலும் கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்