பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-23 15:54 GMT
ராதாபுரம் தாலுகா பரமேஸ்வரபுரம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடமானது ஓடையின் மீது அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பயணிகள் நிழற்கூடத்தின் அடிப்பகுதியில் உள்ள கான்கிரீட் தூண்கள் சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் நிழற்கூடத்துக்குள் செல்லாமல் பயணிகள் வெளியே நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்