கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிவறை அவர்களுக்கு தெரியாத வகையில் கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் பொதுமக்களுக்கு கழிவறை எங்கு இருக்கிறது என தெரியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் கழிவறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.