கரூர் தாந்தோணிமலையில் இருந்து சுங்ககேட் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழி இன்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.