புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Update: 2023-08-23 13:23 GMT

தஞ்சை மிஷன்தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை ஊழியர்கள் சாலையோரத்தில் குவித்து வைத்து தீ வைத்துவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், புகை மூட்டத்தால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்