பன்றிகள் தொல்லை

Update: 2023-08-23 13:22 GMT

தஞ்சையை அடுத்த ஆர்.எம்.எஸ்.காலனி, பால்பண்ணை,இபி.காலனி பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடைக்குள் உருண்டு, புரண்டு சாலையில் அங்கும்,இங்கும் உலா வருகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலை சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்