நாய்கள் தொல்லை

Update: 2023-08-23 12:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம், தென்பாதி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும், நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளையும் வேட்டையாடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்