நாய்கள் தொல்லை

Update: 2023-08-20 12:01 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பழைய பஸ் நிலையம், லெட்சதோப்பு, சிவக்கொல்லை, நாடியம்மன் கோவில்ரோடு, ஆகிய இடங்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்