விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள வேண்டாங்குளம் கண்மாயில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது. இதனால் முழுக்கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.