புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-08-16 11:11 GMT

சமயபுரம் போலீஸ் நிலைய வரவேற்பாளர் மேஜை முன்பு போடப்பட்டிருந்த பெஞ்ச் சில நாட்களாக காணவில்லை. இதனால் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி போலீசார் சமயபுரம் போலீஸ் நிலையம் முன்பு பெஞ்ச் மற்றும் பிளாஸ்டிக் நாற்காளிகளை போட்டுள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்