கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இரவு நேரங்களில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.