புகையால் மாணவர்கள் அவதி

Update: 2023-08-09 12:28 GMT

புகையால் மாணவர்கள் அவதி

பெருமாநல்லூர் ஊராட்சியில் சுடுகாடு பகுதியில் தினமும் தீப்பிடித்து புகை மண்டலமாக காணப்படுகிறது. அருகில் ஊராட்சி பள்ளி உள்பட 3 பள்ளிகள் அருகில் உள்ள நிலையில் மாணவ-மாணவிகளை பற்றி கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் குப்பையை கொட்டுகிறார்கள். அந்த சுடுகாடு பகுதியில் தினமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. புகைமண்டலமாக காட்சியளிப்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி இதற்கு உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குட்டிகுமார், பெருமாநல்லூர்

86675 81996


மேலும் செய்திகள்