இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டண கழிப்பிடம்

Update: 2022-07-24 16:14 GMT

திருச்சி மாவட்டம், ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆண்கள், பெண்களுக்கென நவீன கட்டண கழிப்பிடம் இருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இவ்வழியை கடந்து செல்லும்போது இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இந்த கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் போடப்பட்டுள்ள தகரம் சிதிலமடைந்து, கட்டிடத்தின் உள்பகுதியில் மேலே உள்ள சிமெண்டு பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்