பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2023-08-06 11:33 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சி மலையப்பபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அதன் அருகே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி உள்ளதால் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்