ஆபத்தான பள்ளம்

Update: 2023-08-02 16:17 GMT

 ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகர் 16-வது வார்டில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கடந்த 15 நாட்களாகியும் இந்த பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவா்கள் வாகனங்களில் செல்பவா்கள் பள்ளத்துக்குள் விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. உடனே பாதாள சாக்கடை அமைக்கும் பணியை முடித்துவிட்டு ஆபத்தான நிலையில் காணப்படும் பள்ளத்தை மூட அதிகாாிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்