நடுவீரப்பட்டு அருகே சென்னப்பநாயக்கன்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. தற்போது இந்த நிழற்குடையை தனிநபர்கள் ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடை வைத்துள்ளனர். இதனால் பயணிகள் கால்கடுக்க வெயிலில் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழற்குடையை பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.