கடலூர் மாநகராட்சி பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு கடிப்பதால், மாநகர மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடலூர் மாநகராட்சி பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் கோரிக்கையாகும்.