கரூர் மாவட்டம் ஈரோடு -கரூர் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே குந்தாணிப்பாளையம் நத்தமேடு பஸ் நிறுத்தம் அருகே லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்திருந்து பஸ் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நிழற்குடைக்குள் பல்வேறு வகையான விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இதனால் நிழற்குடையே சுவரொட்டிகளாக காட்சியளிக்கிறது. இதில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிழற்குடைக்குள் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.