பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்

Update: 2023-07-26 11:42 GMT

கரூர் மாவட்டம் சேமங்கி செல்வநகரில் உள்ள பெண்களின் நலன் கருதி அந்த பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் பழுது ஏற்பட்டு கழிவுநீர் குழாய் வழியாக கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றதன் காரணமாக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்தனர். தற்போது வரை அதனை சரிசெய்யாததால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்