கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் நொய்யல் அருகே குறுக்கு சாலையில் உள்ள பங்களா நகரில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது. ஆனால் சேவை மையத்தை திறந்து வைத்து சேவைகள் செய்யப்படவில்லை. இந்த சேவை மையம் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த சேவை மையம் திறக்கப்படாததால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.