கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-07-19 17:46 GMT
கடலூர் சுப்புராயலு நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி