பூட்டி கிடக்கும் பொதுக்கழிப்பிடம்

Update: 2023-07-19 09:25 GMT

கோவை அருகே பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள பொது கழிப்பிடம் பூட்டி கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவசர தேவைக்கு அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் பெண் பக்தர்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. எனவே அந்த கழிப்பிடத்தை உடனடியாக திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்