குரங்குகள் தொல்லை

Update: 2023-07-16 17:28 GMT
செஞ்சி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் கையில் இருக்கும் திண்பன்டங்களை பிடுங்கி செல்கின்றன. மேலும் திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புகாட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்