மின்கம்பங்களில் விளம்பர பதாகை

Update: 2023-07-12 10:12 GMT

தாராபுரத்தில் சாலையோர மின் கம்பங்களில் கம்பி மற்றும் கயிறு கட்டி அதிகளவில் விளம்பரப் பதாகைகளைப் தொங்க விட்டுள்ளனர்.. இதனால் மின்சார ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக கம்பி கட்டி விளம்பரப்பதாக வைத்ததால் காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்களின் தலை மீது விழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மின்கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைப் பொருத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.


மேலும் செய்திகள்