சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்

Update: 2023-07-09 11:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தேண்கனியூர் ஊராட்சி வடக்கு மோத்தப்பட்டி காலனியில் சுமார் 30 ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் வீட்டில் வசிக்கும்போது, இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்