திறக்கப்படாத அலுவலகம்

Update: 2023-07-09 08:16 GMT

பேச்சிப்பாறையில் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திற்பரப்பு வருவாய் கிராமத்திலிருந்து பிரித்து புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் மலையோர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சமீப காலமாக இந்த அலுவலகம் முறையாக திறக்கப்படுவதில்லை. பூட்டியே கிடக்கிறது. இதனால், பல்வேறு தேவைகளுக்கான வரும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலகத்தை முறையாக திறக்க வேண்டும்.

-ராஜசேகர், பேச்சிப்பாறை

மேலும் செய்திகள்