வடலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தர்மசாலை ரோட்டின் ஓரத்தில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலையோரத்தில் வாகனங்கள் இறங்கினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரியாக மூட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.