விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழவிகுளம் ஊராட்சியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும்.