குரங்குகள் தொல்லை

Update: 2023-06-28 18:15 GMT
மரக்காணம் தாலுகா ஆலத்தூர் கிராமம் 3-வது வார்டு சிவன் கோவில் அருகே குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும்.

மேலும் செய்திகள்