கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அம்மன் கோவில் தெருவில் சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்து செல்ல ஏதுவாக சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தொிகிறது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் டயரை பதம் பார்த்து விடுகிறது. எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும்.