புதர்மண்டி கிடக்கும் குளம்

Update: 2023-06-28 12:37 GMT
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி அரசு தொடக்க பள்ளி அருகே வேளான் குளம் உள்ளது. இந்த குளம் தற்போது புதர்மண்டி பாசி படர்ந்தும் கிடக்கிறது. இதனால் குளத்து நீர் மாசமடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்