ஆமை வேகத்தில் பணி

Update: 2023-06-28 09:45 GMT

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி எம்.ஜி. நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் போதிய இடவசதி இல்லாத வகுப்பறைகளில் கடும் சிரமத்துக்கு மத்தியில் பாடம் படித்து வரும் நிலை நீடிக்கிறது. எனவே கட்டிடங்கள் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்