அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதுராகுடிசல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள சாலை இருபுறமும் சாக்கடை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல சாலையின் நடுவே சிமெண்டு கான்கிரீட்டால் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுப்பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுராகுடிசல் நடுத்தெரு வழியாக செல்ல வாகனங்கள் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த பெரிய பள்ளத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.