சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் வசதி இல்லை. இதனால் இந்த மருத்துவமனைக்குள் பாம்பு போன்ற விஷபூச்சிகள் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். நோயாளிகளின் நலன்கருதி இங்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.