விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இருந்து வந்த பொது கழிப்பறை கட்டிடத்தை கால்நடை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக மாற்று கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. பொது கழிப்பறை வசதி இல்லாததால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கழிப்பறை வசதி ஏற்படுத்திட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.