செங்கோட்டை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ரெயில்கள் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்கின்றன. இதனால் கால விரயம் ஏற்படுவதால், பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது. எனவே கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?