பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-06-18 15:56 GMT
நெய்வேலி அருகே கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக வயதானவர்கள், பள்ளி, கல்லூாி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்