தூர்வாரப்படாத பேராம்பூர் பெரிய ஏரி

Update: 2023-06-18 12:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் பேராம்பூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய நீர்ப்பாசன ஏரி உள்ளது. விராலிமலை- கீரனூர் சாலையில் அமைந்துள்ள இந்த ஏரியின் பெரும்பாலான பகுதியில் கொட்டை செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இந்த செடிகள் வளர்ந்துள்ளதால் ஏரியில் குறைந்த அளவே மழை நீரை தேக்கி வைக்க முடியும். இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவிக்கும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் பற்றாக்குறை ஏற்படும். ஆகவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழை காலம் வருவதற்கு முன்பே பேராம்பூர் பெரிய ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள கொட்டைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்