செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும்

Update: 2023-06-14 07:06 GMT

கடையல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான போங்கின்காலை, ஆம்பாடி, சக்கரபாணி, சிற்றார் அணை-1 ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதி சீராக இருப்பதில்லை. அவசர காலங்களில் அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி செல்போன் கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சுஜின், கடையல்.

மேலும் செய்திகள்