கடலூர் முதுநகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மேற்கூரை இல்லாமல் பல ஆண்டுகளாக பாிதாபமான நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நிழற்குடையில் மேற்கூரை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?